மாலை மங்கும் நேரம்!

12173

என் செல்போன் ரீங்கரித்தது. அடுப்பை சிம்மில் வைத்து விட்டு போனை கையில் எடுத்தேன்.

நிஷா.

“ஹாய் டி.”

“ஹாய் ஸ்வாதி. எப்படி இருக்க”

“fine டி. நீ”

“fine. இப்போ தான் ஜஸ்ட் 1 hour முன்னாடி உன்னை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வாசல்ல பார்த்தேன். கூப்பிடுறதுக்குள்ள உன் ஹஸ்பண்ட் வண்டியை திருப்பிட்டார். எனக்கும் டாக்சி வந்துடிச்சி. என்ன உன் ஹஸ்பண்ட் தாடியெல்லாம் வெச்சிருக்கார்”

“இரு இரு…. அவர் என் ஹஸ்பண்ட் இல்ல. கொழுந்தனார். ஹஸ்பண்ட் டூர் போயிருக்கார்.”

“ஓ…” அவள் குரலில் கிண்டல்.

“ஹேய்…. மளிகை சாமான் வாங்க வந்தேன்”

“ஏன் தனியா வந்து வாங்க முடியாதா”

“போடி…. அவர் ஜஸ்ட் ஹெல்ப் பண்ண வந்தார். ஆமாம் நீ எப்போ சென்னை வந்தே… சொல்லவே இல்ல. அதுவும் ஒரே ஏரியாவுல சுத்திக்கிட்டு இருக்கே. ஒரு போன் இல்ல….”

“நான் சென்னை வந்து 1 வீக் ஆகுது. நான் தங்கி இருக்குறது வளசரவாக்கத்தில் அத்தை வீட்டுல. அத்தைக்கு சின்னதா ஒரு ஆப்பரேஷன் வேற. அதான் ஆஸ்பத்திரி, வீடுன்னு ஒரு வாரமும் ஓடிடுச்சி. இன்னைக்கு ஒரு இன்டெர்வியூ அந்த பக்கம். முடிச்சிட்டு போன் பண்ணனும்னு நினைச்சேன்…”

“இன்டெர்வியூ எப்படி இருந்துச்சி”

“உனக்கு தெரியாதா. நீயும் நானும் தானே ஒரு வருஷம் இன்டெர்வியூ, க்ரூப் டிஸ்கஷன்னு அலைஞ்சோம்”

“சரி சரி. புரியுது”

“உன் அம்மா மாதிரி என் அப்பா ஒரு முடிவுக்கும் வர மாட்டேங்குறார்” என்றால் ஏக்கமாக.

“அலையாதே டி. நல்ல பையன் கிடைச்சா உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பார்”

“உங்க அம்மா செமையா பார்த்திருக்காங்க…. மாமனார் மாமியார் உயிரோட இல்லை. ஒரே நாத்தனார் அமெரிக்காவுல செட்டில்டு. கியூட்டா ஒரு மாப்பிள்ளை. போதாதுக்கு செமையா ஒரு கொழுந்தன் வேற. குடுத்து வெச்சவ டி நீ”

“ஏய்… வய மூடு. அசிங்கமா பேசாத”

“அப்படி என்னடி அசிங்கமா பேசிட்டேன்? ஓ கொழுந்தன் மேட்டரா”

“ஹேய்…. திரும்ப திரும்ப சொல்றேன்… அவர் ஹஸ்பண்டோட அண்ணன். widower”

“சரிம்மா… சரி…. இருந்தாலும் கல்யாணம் ஆன தம்பி கூட அவர் எதுக்கு தங்கணும்?”

“என் ஹப்பி தான் டி கம்பல் பண்ணி அவரை இங்க தங்க வெச்சிருக்கார். பாவம் டி”

“ரொம்ப பாவம் பார்க்காத டி”

“ச்சீ…”

“ஏய்… அமுக்குணி… உன்னை பத்தி எனக்குத் தெரியாதா? சரியான ஊமைக்கொட்டான். ஊமை ஊரை கெடுத்துச்சாம்…. நான் 2 வருஷமா ரூட் போட்ட ஆஷிக்கை 10 நாள் நான் காலேஜ் வராதப்போ சைலென்ட்டா மடக்கிப்போட்டவ தானே நீ”

“நிஷா….ப்ளீஸ்…. அதையெல்லாம் கிளறாதே. நான் இப்போ கல்யாணம் ஆனவ” எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“ஸ்வாதி….” ஹாலில் இருந்து என் கொழுந்தனார் அருண் அழைத்தார். “வந்துட்டேன் அத்தான்” என்று குரல் கொடுத்துவிட்டு….

“நிஷா…. அவர் கூப்பிடுறார். நான் அப்புறம் கால் பண்ணுறேன்”

“கால் மட்டும் தான் பண்ணுவியா…. வீட்டுக்கு கூப்பிட மாட்டியா”

“சாரி சாரி…. நாளைக்கு நீ பிரீனா மறக்காம வா” அவள் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தேன். அடுப்பில் இருந்த பாலை கப்பில் ஊற்றி ஏற்கனவே இருந்த காப்பித்தூள் & சர்க்கரை கரைய கலங்கினேன். எடுத்துக்கொண்டு அருணிடம் சென்றேன்.

“சாரி அத்தான். பிரென்ட் போன் .பண்ணுனா… அதான் லேட் ஆயிடுச்சி”

“பரவால்ல ஸ்வாதி”

“இருங்க டிபன் பண்ணிடுறேன்”

“என்ன டிபன் பண்ணப்போறே”

“இட்லி, சாம்பார். தக்காளி சட்னி”

“நான் ஏதும் ஹெல்ப் பண்ணட்டா”

“வேண்டாம் அத்தான். நான் பண்ணிடுவேன்”

“இரு. காப்பி குடிச்சிட்டு வரேன். அட் லிஸ்ட் கறிகாயாவது அறிஞ்சித்தறேன்”

“உங்களுக்கு எதுக்கு அத்தான் சிரமம்”

“ஒரு சிரமமும் இல்லை. டிவி ரொம்ப போர். ஏதாவது வேலை செய்யுறேனே”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

நான் ஸ்வாதி. வயது 23. வழக்கம் போல பி.ஈ. முடித்து ஒரு வருஷம் வேலைக்கு முயற்சித்து, கிடைக்காமல் போக, அம்மா வரன் பார்த்து…. என் அழகிய கணவர் வருண். என் புகுந்த வீட்டை பற்றி நிஷா சொன்னதை கேட்டிருப்பீங்க. வருண் எம்.பி.ஏ. முடித்து மார்க்கெட்டிங் துறையில் வேலை. வயது 28. மாதத்தில் பாதி நாள் டூர். உள்ளூரில் இருக்கும் நாட்களிலும் இரவு வீடு வர 9 ஆகிவிடும். இன்றோடு எனக்கு கல்யாணம் ஆகி சரியாக 3 மாதம், 11 நாட்கள் ஆகுது.

🔍[Image: 94017683_chandini-tamilarasan130.jpg]

அருண் எம்.எஸ்.சி., பி.எச்.டி. வயது 30. அரசு கல்லூரியில் வேலை. மாலை 6 மணிக்குள் வீட்டில் இருப்பார். காதல் கல்யாணமாம். 2 வருஷம் முன்னால் பாவம் ஒரு விபத்தில் அவர் மனைவி இறந்துவிட்டாள். அமைதியான மனிதர். தம் அடிப்பதை தவிர வேறு குறை சொல்ல முடியாது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். தாடியை எடுத்தால் வருணின் அச்சு அசல் copy போல இருப்பார்.

அதிகம் சீர் செனத்தி எதிர்பார்க்காத வரன். வருண் பார்க்க சினிமா ஹீரோ போல இருப்பார். அதனாலேயே நான் பரிபூர்ணமாக சம்மதித்தேன்.

கிச்சனில் வேலையாக இருந்தேன். அருண் சற்று தள்ளி நின்று சட்னிக்கு சாம்பாருக்கு தக்காளி, வெங்காயம் அரிந்துக்கொண்டு இருந்தார்.

“என்ன ஸ்வாதி, உங்க அம்மா உன்னை மறந்து போயிட்டாங்களா. இந்த பக்கம் வர்றதே இல்லை. உடம்புக்கு ஏதும் இல்லையே”

“நல்ல இருக்காங்க அத்தான். பாவம் என்ன பண்ணுவாங்க. ஸ்கூல்ல லீவும் கிடைக்கலை”

“நீ வேணும்னா கோயம்பத்தூர் போயிட்டு வாயேம்மா. உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்”

“இல்லங்க அத்தான்… அவர் எப்படியும் இன்னமும் 4 நாள்ல வந்திடுவார்…. அம்மா எப்படியும் தீபாவளி சீர் செய்ய நெக்ஸ்ட் வீக் வருவாங்க அத்தான்”

“சீர் மேட்டர் எல்லாம் எனக்குத் தெரியாது ஸ்வாதி. அவங்க வந்தா நல்லா கவனிக்கணும். என்ன”

“சரிங்க அத்தான்” நல்ல மனுஷன்.

“எப்படியும் ஒரு வாரமாவது தங்குவாங்க இல்ல”

“இல்லங்க அத்தான். சனிக்கிழமை காலையில வந்துட்டு ஞாயித்துக்கிழமை நைட்கிளம்பிடுவாங்க ”

“என்னம்மா… முதல் முதலா நம்ம வீட்டுக்கு வராங்க. இப்படி அவசரப்பட்டுக்கிட்டு கிளம்புறாங்க.”

“அத்தான் எங்க வீட்டு சூழ்நிலை உங்களுக்கு தெரியுமே. அம்மா தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். கீர்த்தியை வீட்டுல விட்டுட்டு வேறவர்றாங்க. அதான்”. கீர்த்தி என் தங்கை. பி.ஈ. பைனல் இயர்.

“ஏம்மா கீர்த்தியை கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானே. அப்போ உங்க அப்பா வரலையா ”

எனக்கு சங்கடமாக இருந்தது. பொறுப்பில்லாத வேலை வெட்டிக்கு போகாத அப்பாவை நினைத்து கடுப்பாகவும் இருந்தது.

நல்ல வேலையாக அருணின் போன் அழைத்தது. என் பதிலை எதிர் பார்க்காமல் நகர்ந்தார்.

என்னை தாண்டி போகும்போது…. அவர் சற்று முன் பிடித்திருக்க கூடிய வில்ஸ் பில்டர் வாசமும், அவர் எப்போதும் பிரத்தியேகமாக பயன்படுத்தும் பாடி ஸ்ப்ரே வாசமும் கதம்பமாக கலந்து என் நாசிகளும் சென்று மூளையை வருடிச் சென்றன.

Previous articleஓக்க விட மாட்டோம்னா சொல்றோம் கதவை சாத்திட்டு வாடா!
Next articleஉன்னைக் கொடு என்னைத் தருவேன்!