இளவரசி வைஷ்ணவி தேவி – பண்டைய அரசகாமக்கதைகள்

7651

Tamil Aunty Koothi Kathaigal,tamil appa magal kama kathai, tamil kamakathai, kamaveri kathaikal, sex story, new kamakathaikal, tamil sex kathaigal, sex kathai, kamakathaikal new
இக்கதை காதல் நிறைந்த, சிறிதளவு காமத்தை தொட்டுச் செல்லும் காதல் நிறைந்த காமக்கதை. இந்தக்கதையில் உள்ள கதாபத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..!! இந்தக்கதை எந்தவொரு பண்டைக்காலத்து உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையது கிடையாது.

நான் நல்ல பாண்டியன். “நல்ல தேவன்” என்பது எனது பெயர். பாண்டியனின் சேனாதிபதியாக இருந்ததால், “நல்ல பாண்டியன்” என்பார்கள்.

பொழுது சாயும் நேரம், புகார் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கடலின் அலைகளைப் போல என் மன அலைகளும் வேகம் கொண்டன. கண்கள் கலங்க கடலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

காரணம் கடலிற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. 6 மாதங்களுக்கு முன் இதேபோல ஒரு நாளில்தான் தோத்தா கிழவன் இறந்தார். கரைதொட்டு மீண்டும் கடலிற்குத் திரும்பும் அலைகளோடு வாருங்கள், என் பழைய கடல் வாழ்க்கைக்குச் செல்வோம்..!!

இந்துமகா சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டமான மாலை நேரம். சூரியன் மெல்ல மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டத்தையும் சூரியனின் அழகையும், மேகங்களின் வர்ண ஜாலங்களையும் ரசித்தவாறு கப்பலின் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

நான் வீரத்தேவன். கழுகுத்தேவன் என்று அழைப்பார்கள். காரணம் இந்தக் கப்பலின் பெயர் கடற்கழுகு. இதன் தலைவன் நான்.

என் பெற்றோர் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் அனாதையாக கலிங்க வீதிகளில் அலைந்தபோது, “ராஜசிம்மன்” என்ற இந்தக் கப்பலின் தலைவன் என்னை எடுத்து வளர்த்தார்.

எப்போது அவர் என்னை மகனாக ஏற்றுக்கொண்டாரோ அப்போதே என் கடற்பயணமும் ஆரம்பித்துவிட்டது. அவர் என்னை மகனாக வளர்ப்பதைவிட ஒரு நல்ல வீரனாக வளர்ப்பதில்தான் அக்கறை கொண்டார். அதனால் சிறு வயது முதல் கடற்சண்டைகள், கப்பல் செலுத்தும் முறைகள், நாடுகளின் அமைப்பு, காற்றின் திசைகள் என அனைத்தும் சொல்லித்தந்தார்.

என் 19, 20 ஆவது வயதில் மிகச்சிறந்த கடற்கொள்ளையனாகத் திகழ்ந்தேன். ஆம் நான் ஒரு கடல் கொள்ளையன்..!!

என் வளர்ப்புத்தந்தை ஒரு கடற்கொள்ளைக்காரத் தலைவர். வளர்ப்பால் நான் கடற்கொள்ளையனாக இருந்தாலும், என் தோற்றம் அரச வம்சத்தவர்களைப் போல இருக்கும். நெடிய உயரமும், பரந்த மார்பும், இறுகிய கைகளும், நீண்ட தலை முடியும், முறுக்கு மீசையும், பொது நிறமும் என்னைப் பார்ப்பவர்களை நான் ஒரு அரசகுமாரன் என்று நினைக்கத் தூண்டிவிடும்.

சில காலம் செல்ல என்னை கப்பலின் உப தலைவன் ஆக்கினார் தந்தை. நானும் அதற்கேற்றால் போல் அனைத்து கடற் சண்டைகளிலும் வெற்றி வாகை சூடி, பொன்னையும் பொருளையும் குவித்தேன்.

சில வேளைகளில் பொன்னோடு சேர்த்து பெண்களும் மாட்டிக்கொண்டு விடுவார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஒன்றுமே செய்ய மாட்டோம். இதுதான் மற்றைய கடற்கொள்ளையர்களில் இருந்து எம்மை வேறு படுத்திக்காட்டியது.

பெண்களுக்கு விருப்பம் இல்லாவிடின் நம் கை விரல் கூட அவர்கள் மீது படக்கூடாது என்பது என் தந்தை எனக்குச் சொல்லிக்கொடுத்த பாடம். எனக்கு மட்டுமல்ல கப்பலின் அனைத்து வீரர்களுக்கும்தான்..!!

எனக்கு 25 வயது இருக்கும்போது அந்தத் துயரச்சம்பவம் நடைபெற்றது. எமக்கும், வேறு கடற் கொள்ளையர்களுக்குமிடையில் ஆதிக்க யுத்தம் நடைபெற்றது. அதில் நாங்கள் வெற்றி பெற்றாலும் என் தந்தை மரணமடைந்து விட்டார்.

அன்றிலிருந்து நான் கப்பலின் தலைவனாக மாறினேன். என் கப்பலை மாற்றியமைத்தேன்.

700 அடி நீளமான என் கப்பலில் 40 பீரங்கிகள் பொருத்தினேன். கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்காக 10 பாய்களை அமைத்தேன். கப்பலின் ஆள் வலிமையை 150 பேர் ஆக்கினேன். அதன் பின்னர் என் கப்பலின் பெயரைக் கேட்டாலோ, என் பெயரைக் கேட்டாலோ அனைவரும் நடுநடுங்குவர்.

எனக்கு நண்பர்களாக கருப்புபாண்டியும், மாறத்தேவனும் கிடைத்தார்கள். சிறந்த வீரர்கள். அதனால் அவர்களை என் தளபதிகள் ஆக்கிக்கொண்டேன்.

சிக்கலான சமயங்களில் என் தந்தையின் நண்பர் “தோத்தா” கிழவனிடம் ஆலோசனை கேட்பேன். அவருக்கு அப்போது 65 வயது ஆகியிருந்தது. இருந்தாலும் எங்களோடே கடற்பயணங்களில் ஈடுபட்டிருந்தார். என் தந்தை ராஜசிம்மனை விட அதிக பாசம் காட்டியவர் அவர்.

என் 28 ஆவது வயதில் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஒன்று ஏற்பட்டது.

நீண்ட கடற்பயணத்தின் பின், கப்பலை பழுது பார்ப்பதற்காகவும் வெடிமருந்துகள் வாங்குவதற்காகவும் கப்பலை பேய்த்தீவை நோக்கிச் செலுத்தினேன். வருடத்திற்கு 2, 3 முறைதான் இத்தீவிற்கு வருவேன். அடிக்கடி வர விரும்புவதில்லை.

காரணம் பேய்த்தீவு நரமாமிசம் உண்ணும் பழங்குடிகள் வாழ்ந்த தீவு. அந்தத் தீவின் மறு பக்கத்தில்தான் கடற்கொள்ளையர்களின் பெரிய துறைமுகம் அமைந்திருந்தது. அனைத்து கடற்கொள்ளையர்களும் தங்கள் கப்பலை பழுது பார்க்கவும் வெடிமருந்துகள், வேறு நாட்டுப் பெண்கள் என எதை வாங்குவதற்கும் இங்குதான் வருவார்கள்.

“பசல்கார்” என்ற கொள்ளையன்தான் அப்பகுதியை நிர்வகித்தான். பழங்குடிகளோடு ஒப்பந்தம் செய்து, அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தான்.

சாதாரண கப்பல்களோ, வியாபாரக் கப்பல்களோ இந்தப் பக்கம்கூட வராது. ஒவ்வொரு நாள் இரவும் எங்காவது பெண்களில் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பயங்கரமானது இந்தப் பேய்த்தீவு..!!

ஆனால் இத்தீவிற்கு வந்துவிட்டால் கொள்ளையர்கள் ஒருவரை ஒருவர் தாக்கக்கூடாது என்பது இத்தீவின் சட்டம்.

2 நாள் பயணத்தின் பின், மாலை நேரத்தில் பேய்த்தீவை அடைந்தோம். துறைமுகத்திலும் கடலிலும் பல கொள்ளையர்களது கப்பல்கள் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தது. என் கப்பலை கடற்கரைக்கு சமீபமாக நங்கூரமிட்டேன்.

அப்போது சற்று தூரத்தில் கடற்கரையில் அரச வம்சத்தவர் பயணம் செய்யும் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிற்பதைக் கவனித்தேன்.

“இந்த இடத்தில் இந்தக் கப்பலுக்கு என்ன வேலை..?” என்று யோசித்துக்கொண்டே தீவுனுள் பிரவேசித்தேன்.

நேராக என் நெருங்கிய நண்பன் பக்ருவின் மாளிகைக்குச் சென்றேன். பக்ரு என்னைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றான்.

இருவரும் எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டோம். பின் வழமைபோல கப்பலிற்கு தேவையான பொருட்களின் விபரத்தை அவனிடம் தெரிவித்தேன்.

“இரவாகி விட்டதால் நாளை காலை பார்க்கலாம், நீ சென்று நண்பர்களை அழைத்து வா..!!” என்று சொன்னான் பக்ரு.

அப்போது அரச வம்சக்கப்பலைப் பற்றிய ஞாபகம் வரவே, அதைப்பற்றி அவனிடம் கேட்டேன்.

“ஆம் கழுகுத்தேவா. அது கலிங்க அரச வம்சத்தவர் பயணம் செய்த கப்பல். பாஞ்சாலம் செல்லும் வழியில் துஸ்லாவிடம் மாட்டிக்கொண்டனர். கப்பலின் பொக்கிஷங்களை சூறையாடியவன், அக்கப்பலில் இருந்த கலிங்க இளவரசியின் அழகில் மயங்கி, அவளையும் மற்றவர்களையும் இங்கே கொண்டுவந்து விட்டான். மற்றவர்களை கொன்று விட்டான். இளவரசியை இத்தீவின் கிழக்குப் பக்கத்தில் மனித நடமாட்டம் அற்ற ஒரு பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து, அதில் சிறை வைத்திருக்கிறான். அச்சிறையில் வைத்து தன்னை மணந்து கொள்ளும்படி இளவரசியை வற்புறுத்துகின்றான். வழமையாக தன்னிடம் சிக்கும் பெண்களை சிதைப்பவன் அவன். இளவரசியின் அதிர்ஷ்டம் அவர்களை இன்னும் எதுவும் செய்யவில்லை..!!” என்றான் பக்ரு.

“ஆனால் கலிங்க நாட்டு படைகளுக்கு இது தெரிந்தால் இத்தீவிற்கே விபரீதமாகிவிடுமே..!! அதனால் இளவரசியை சிறை எடுத்தது முட்டாள்தனம் என்று யாரும் சொல்லவில்லையா..!!” என்று கேட்டேன் நான்.

“கேட்டார்கள்.. மரணத்தை தழுவினார்கள்..!! பசல்காரின் நண்பன் துஸ்லா. அதனால் அவனை எதிர்க்க யாரும் பிறகு வரவில்லை..!! என்றான் பக்ரு.

“சரி இரவு கவிழ்வதற்குள் நண்பர்களை அழைத்து வந்து விடுகிறேன்..!!” என்று கூறிவிட்டு கப்பலை நோக்கி வேகமாகச் சென்றேன்.

அங்கு கடற்கரையில் மாறதேவனும், கருப்புபாண்டியும், தோத்தா கிழவனும் எனக்காக காத்திருந்தனர்.

“தாமதத்திற்கு மன்னியுங்கள். மாறதேவா, நம் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டாயா..?” என்று கேட்டேன்.

“ம்ம்.. அப்போதே ஆயிற்று..!! ஏன் இத்தனை தாமதம்..?” என்று கேட்டான் மாறதேவன்.

“போகும் வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறுகிறேன், இப்போது பக்ருவின் மாளிகைக்கு செல்லலாம் வாருங்கள்..!!” என்று மூவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறினேன்.

பக்ருவின் மாளிகையில் இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றோம். தூக்கத்திலும் அந்த இளவரசியின் நினைவாகவே இருந்தது.

துஸ்லாவை நான் அறிவேன். நரமாமிசம் உண்ணும் மகா முரடன் அவன். அவன் கையில் சிக்கிய இளவரசியை நினைக்க வேதனையாக இருந்தது.

“நாளை காலை எப்படியாவது இளவரசியைப் பார்த்துவிட வேண்டும்..!!” என்று தீர்மானித்துக்கொண்டு உறங்கிப் போனேன்.

மறுநாள் காலை, பக்ருவுடன் கருப்புபாண்டியை கப்பலிற்குத் தேவையான பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு, நானும் மாறதேவனும் தீவின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

என் நோக்கம் மாறதேவனுக்கு புரிந்திருக்க வேண்டும். “நண்பா அவர்களிடம் நம் கப்பலை பழுதுபார்க்க மரங்களை வாங்கச் செல்வதாகத்தானே கூறினாய்..!! ஆனால் தற்போது நீ செல்வதைப் பார்த்தால், இளவரசியைப் பார்க்கச் செல்வது போலல்லவா இருக்கிறது..!! உண்மையைச் சொல்..!!” என்று கேட்டான்.

“உண்மைதான், முதலிலேயே இளவரசியைப் பார்க்கப்போகிறேன் என்று கூறியிருந்தால், நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னைத் தடுத்திருப்பீர்கள். அதனால்தான் உண்மையை மறைத்தேன்..!!” என்றேன்.

“ஆனால் கழுகுத்தேவா இதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும்..!!” என்று எச்சரித்தான் மாறதேவன்.

“இந்த உருவிலேயே சென்றால்தான் பிரச்சனைகள் ஏற்படும். மாறு வேடத்தில் சென்று சந்தித்தால் எந்தப் பிரச்சனைகளும் நேராது..!!” என்று கூறினேன்.

அதனால் இருவரும் பெண்கள் போல மாறுவேடம் போட்டுக்கொண்டு, முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு தொடர்ந்து சென்றோம்.

சில காத தூரம் சென்றதும், ஒரு குடிசை மட்டும் காட்டுப் பகுதியை அண்மித்து இருப்பதைக் கண்டோம்.

அக்குடிசையின் வெளியே 10, 15 கொள்ளையர்கள் மது அருந்திக் கொண்டும், போதையில் பாடிக்கொண்டும் இருந்தனர்.

அக்குடிசையில்தான் இளவரசி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. மெதுவாகச் சென்று குடிசையின் வெளி வாசலை அடைந்தோம்.

எங்களைக் கண்ட ஒரு கொள்ளையன், “ஏய், யார் நீங்கள்..? இங்கு எதற்காக வந்தீர்கள்..?” என்று அதட்டினான்.

குரலை மாற்றி பேசக் கூடிய மாறதேவன், “இளவரசிக்கு பழங்கள் கொண்டுவந்தோம்..!!” என்று பெண் குரலில் பேசி பழங்களைக் காட்டினான்.

“சரி.. சரி.. பழங்களை சீக்கிரம் கொடுத்து விட்டு போய்விடுங்கள்..!!” என்று சொன்னான் அந்தத் தடியன்.

நாங்கள் குடிசையில் நுழையும்போது, அந்தக் கொள்ளையர் கூட்டத்தில் இருந்த ஒருவன், “வர வர பெண்கள் கூட ஆண்களைப் போல கட்டுமஸ்தானவர்கள் ஆகி விட்டார்கள்..!!” என்று கூறினான்.

அதை அடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்து சிரிப்பொலி பலமாகக் கிளம்பியது. இதையெல்லாம் சட்டை செய்யாமல், நாங்கள் குடிசையின் உள்ளே சென்றோம்.

அங்கு ஒரு பெண் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தாள். ஆனால் அவளிடம் அரசகுமாரி ஒருத்திக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எதுவும் இல்லாததால், அவள் அரசகுமாரி அல்ல என்ற முடிவுக்கு வந்தோம்.

அப்போது எங்கள் இருவரையும் கண்ட அவள், “நீங்கள் யார்..?” என்று கேட்டாள்.

“நாங்கள் கலிங்கர்கள், உங்களைக் காப்பாற்ற இங்கு வந்தோம்..!!” என்று கூறி எங்கள் வேடத்தைக் கலைத்தோம்.

எங்களைக் கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாலும், காப்பாற்ற வந்தவர்கள் என்பதால் கூச்சல் எதுவும் போடாமல் இருந்தாள். பின்னர் குடிசையின் பின்புறம் அழைத்துச் சென்றாள். அங்கு எங்களை நிற்கச் சொல்லிவிட்டு சென்று இளவரசியை அழைத்து வந்தாள்.

இளவரசியைக் கண்டதுமே என் சித்தத்தைப் பறி கொடுத்தேன்.

மான் போன்ற விழிகள், தாமரை போன்ற செவ்விய உதடுகள், சற்றே பெருத்த முலைகள், கொடி போன்ற இடை, கீழே சற்று அகலமாக அவள் கால்கள், முலைகளின் மேல் கொடி போல இருந்த கருங்கூந்தல் என தேவலோக கன்னிகை போல இருந்தாள்..!!

அவளை நான் மேலிருந்து கீழாக ரசிப்பதைக்கண்டு என் கவனத்தை திசை திருப்ப, “யார் நீங்கள்..?” என்று கேட்டாள்.

மெல்ல அவள் அருகில் சென்று, அவள் கண்களோடு என் கண்களை உறவாடவிட்டு பேச ஆரம்பித்தேன்.

“நாங்கள் கலிங்கர்கள், நீங்கள் இங்கு சிறைபட்டு இருப்பதை அறிந்து உங்களை மீட்க வந்தோம்..!!” என்று கூறினேன்.

அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றோம்.

என் அருகில் வந்த மாறதேவன் என் தோள்களைப் பிடித்து உலுக்கிய பின்னர்தான் சுய உணர்வை அடைந்தேன்.

மாற்றானான என் கண்களோடு உறவாடியதை நினைத்து. அவள் கன்னங்கள் சிறிது சிவந்தன.

பின், என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தவாறு, “வீரரே அது அத்தனை சுலபம் இல்லை..!! உங்களைப் போல் முன்னரும் சில வீரர்கள் வந்தனர். ஆனால் துஸ்லாவின் வாளிற்கு இரையாகிப் போனார்கள்..!!” என்று சொன்னாள்.

“ஆனால் நாங்கள் அவர்களைப் போலல்ல, விரைவில் உங்களைக் காப்பாற்றுவோம்..!!” என்று சொன்னான் மாறதேவன்.

“மகிழ்ச்சி, ஆனால் 7 நாட்களுக்குள் நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும். இல்லையேல் அனைத்தும் முடிவடைந்து விடும்..!! இந்த 7 நாட்களுக்குள் இளவரசி அந்த முரடனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிடின், 8வது நாள் இவரை ருசித்துவிட்டு பழங்குடிகளுக்கு நரபலியாகக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறான் துஸ்லா..!!” என்று குரலில் பயம் தொனிக்கக் கூறினாள் இளவரசியின் தோழி.

“கவலைப்பட வேண்டாம்..!! நாளை காலை இதற்கு ஒரு தீர்வோடு உங்களைச் சந்திக்கிறோம்..!!” என்று கூறிவிட்டு மீண்டும் மாறு வேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.

பக்ருவின் மாளிகையை நெருங்கியதும் மாறு வேடத்தைக் கலைத்து விட்டுச்சென்றோம்.

பக்ருவின் வீட்டில் தோத்தா கிழவனும், கருப்புபாண்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன்.

முதலில் அதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் எனக்கு உதவுவதாக வாக்களித்தனர்.

பின்னர் பக்ரு வந்தான். அவனிடமும் நடந்ததைக் கூறினேன்.

“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?” என்று கேட்டான் பக்ரு.

என் மனதை அவளிடம் பறி கொடுத்ததையும், அவர்களைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்ததையும் சொன்னேன். ஒரு வழியாக அவனும் எனக்கு உதவி செய்வதாகக் கூறினான்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான யோசனையில் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டங்களைச் சொன்னார்கள். நீண்ட யோசனையின் பின்னர், நான் ஒரு திட்டத்தைக் கூற ஆரம்பித்தேன்.

“துஸ்லா உயிரோடு இருக்கும்போது நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்தால், அதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் துஸ்லா இறப்பதைத்தவிர வேறு வழியில்லை..!! அதிலும் துஸ்லாவை நாம் கொலை செய்தால் பசல்கரும், துஸ்லாவின் வீரர்களும் சும்மா விடமாட்டார்கள். அதனால் இன்று இரவு துஸ்லாவிற்கு எம் வீரன் ஒருவனை அனுப்பி நன்றாக மதுவை குடிக்க செய்வோம். பின் துஸ்லா முழு போதையில் இருக்கும்போது அவனை பழங்குடிகளின் இருப்பிடத்திற்கு அருகில் விட்டு விடுவோம். மீதியைப் பழங்குடிகள் பார்த்துக்கொள்வார்கள்.

துஸ்லாவின் மரணத்திற்குப் பின், பசல்காரிடம் சென்று வைஷ்ணவி என் காதலி என்பேன். அவன் வைஷ்ணவியிடம் கேட்பான் அவளும் ஆம் என்பாள், அவளும் ஒத்துக்கொண்ட பின் பசல்கர் பிரச்சனை ஏதும் செய்யாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைப்பான். காரணம் கொஞ்சம் நீதி தெரிந்தவன் பசல்கர். ஒருவேளை துஸ்லாவின் வீரர்கள் என்னை எதிர்த்தால், நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை, பசல்காரே பார்த்துக்கொள்ளுவான்..!!

இதுதான் என் திட்டம்.

இதன்படி அனைத்தும் நடந்தால் எல்லாம் வெற்றிதான்..!!” என்றேன். என் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தார்கள்.

மறுநாள் காலை என் திட்டத்தைச் இளவரசியிடம் சொல்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டேன். இளவரசியைச் சந்தித்தேன்.

“இளவரசி உங்களைக் காப்பாற்றுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்..!!” என்றேன்.

என்னவென்று கேட்டாள்.

“வருகின்ற சில நாட்களுக்குள் பசல்காரை அழைத்துக்கொண்டு இங்கு வருவேன். அவன் உங்களிடம் நான் உங்கள் காதலனா என்று கேட்பான். நீங்கள் ஆம் என்று சொல்ல வேண்டும்..!!” என்று சொன்னேன்.

அதைக்கேட்டதும் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. மௌனமாகவே சரியென்று தலையசைத்தாள்.

அவளிடம் விடை பெற்றுக்கொண்டு கப்பலில் திருத்த வேலைகளை பார்ப்பதற்காகச் சென்றேன். பின் அன்று இரவு என் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றினேன்.

மறுநாள் காலை நான் நினைத்தது போலவே நடந்தது. துஸ்லா அங்கு தன் மன்மதலீலையைக் காட்ட முயற்சிசெய்து பிடிபட்டு இருந்தான். இனி மேலும் இவ்வாறு நடப்பதைத் தடுக்க பழங்குடிகள் அவனைப் பலி கொடுத்திருந்தார்கள்.

நண்பனின் மரணத்தால் துவண்டு போயிருந்த பசல்காரின் மாளிகைக்குச் சென்றேன். பசல்காரிடம் இளவரசி வைஷ்ணவி தேவி என்னைக் காதலிப்பதாகச் சொன்னேன்.

அதைக் கேட்ட அவன் அதிர்ச்சியடைந்தான். “நீ என்ன சொல்கிறாய்..? இறந்த என் நண்பன் துஸ்லாவின் காதலி அவள்..!!” என்றான்.

“பசல்கார் உனக்கு சந்தேகமிருந்தால் நிரூபிக்கிறேன் வா..!!” என்று அவனை அழைத்துக்கொண்டு இளவரசியின் இருப்பிடத்திற்குச் சென்றேன்.

அங்கு அவளிடம், “இவன் உன் காதலனா..?” என்று கேட்டான் பசல்கார்.

இளவரசியும், “ஆம்..” என்று கூறினாள்.

“என்னைச் சந்திப்பதற்காக வந்த வைஷ்ணவியை சிறைபிடித்து இங்கு கொண்டுவந்து விட்டான் உன் நண்பன் துஸ்லா. இவள் இங்கிருப்பதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன். இதைப்பற்றி உன்னோடும், துஸ்லாவோடும் பேசுவதற்குள், அவனே தன் முடிவைத் தேடிக்கொண்டு விட்டான்..!! இப்போது இவளை என்னோடு அனுப்பிவை. இவளை நானே அழைத்துச் சென்றிருப்பேன். துஸ்லாவின் வீரர்களால் பிரச்சனை ஏற்படும், அதைத் தவிக்கத்தான் உன்னை அழைத்து வந்தேன்..!!” என்று கூறினேன்.

வேறு எதுவும் பேசாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைத்தான் பசல்கர். தடுக்க வந்த துஸ்லாவின் வீரர்களையும் அடக்கினான்.

நான் இளவரசியை அழைத்துக்கொண்டு பக்ருவின் மாளிகைக்கு விரைந்தேன்.

பக்ருவும் என் நண்பர்களும் இளவரசியை மீட்டதற்கு, என்னை பாராட்டினர்.

அன்று மாலை மாளிகையின் மாடத்திற்குச் சென்றேன். அங்கு வைஷ்ணவி ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக்கொண்டு நின்றாள். நான் வருவதைக் கண்ட அவள் புன்னகையுடன் வரவேற்றாள்.

“இளவரசிக்கு பலமான யோசனையோ..?” என்று கேலியாகக் கேட்டேன்.

“ம்ம்.. என் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தேன்..!!” என்றாள்.

“ஏன், உங்கள் எதிர் காலத்திற்கு என்ன..? அதுதான் பிரச்சனைகள் தீர்ந்து விட்டனவே..!!” என்றேன்.

“இல்லை புதுப் பிரச்சனை ஒன்று தோன்றியுள்ளது..!!” என்றாள்.

“என்ன பிரச்சனை இளவரசி..?” என்றேன்.

“கலிங்கத்திற்கு திரும்பிச் செல்வதைப் பற்றித்தான்..!!” என்றாள்.

“நீங்கள் கலிங்கத்திற்கு திரும்பிச் செல்வதில் என்ன பிரச்சனை..?” என்றேன்.

“தெரிந்துதான் கேட்கிறீர்களா..? என் காதலன் இங்கு இருக்கும்போது, நான் மட்டும் எப்படி கலிங்கம் செல்வேன்..?” என்று கேட்டு நாணத்தால் தலை குனிந்தாள்.

எனக்கு அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. என் கையை கிள்ளிக்கொண்டேன், “கனவல்ல நிஜம்தான்..!!” என்று உணர்ந்தேன்.

மெல்ல அவளை நெருங்கினேன். குனிந்திருந்த அவள் முகத்தை உயர்த்தினேன். அவள் கண்களை நோக்கினேன்.

“இளவரசி நீங்கள் சொன்னது நிஜம்தானா..?” என்று கேட்டேன்.

“ம்ம்.. உண்மைதான்..!! ஆனால் இனி என்னை இளவரசி என்று அழைக்காதீர்கள்..!!” என்று மெதுவாகச் சொன்னாள்.

“ஆனால் வைஷ்ணவி, உன் காதலுக்கு நான் தகுதியானவனா..? நான் கடற்கொள்ளைக்காரன்..!!” என்று வேதனையோடு சொன்னேன்.

“தோத்தா கிழவனிடம் அனைத்தையும் தெரிந்துகொண்டேன். கடல் கொள்ளையர் ஆனது உங்கள் தவறல்ல, கடற்கொள்ளையராக இருந்தாலும், பெண்களை மதிப்பவர் நீங்கள். அதனால் உங்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது..!!” என்று வெட்கச் சிரிப்போடு சொன்னாள்.

மாலை நேரமாகையால் மஞ்சள் சூரிய ஒளிபட்டு, தங்கச்சிலை போல இருந்தாள்.

மெல்ல அவள் கைகளை என் கைகளால் பிடித்தேன். அவளை என் அருகில் இழுத்துக்கொண்டேன். மெல்ல அவள் இதழ்களை நோக்கி என் உதடுகளைக்கொண்டு சென்றேன்.

அப்போது பார்த்து கரடி போல வந்தார் தோத்தா கிழவன்.

“தேவா, கலிங்கத்திற்கு எப்போது புறப்படுகிறாய்..?” என்று கேட்டார்.

வைஷ்ணவியைப் பார்த்து கண் சிமிட்டியபடி, “தோத்தா இனி கலிங்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை..!! கீழே வாருங்கள் சொல்கிறேன்..!!” என்றேன்.

கீழே அனைவரிடமும் எங்கள் காதலைப்பற்றிக் கூறினேன். அனைவரும் சந்தோஷமடைந்தனர்.

அப்போது தோத்தா, “தேவா உனக்கு அதிர்ஷ்டம் உள்ளது. அதனால்தான் இப்படி ஒரு பெண் உனக்கு மனைவியாகப் போகிறாள். அதனால் நீ இனி இத்தொழிலை விட்டுவிடு. காதலர்களுக்கும் திருமணமானவர்களுக்கு ஆபத்தான தொழில். எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது..!! அதனால் வேறு வேலை தேடிக்கொண்டு, அவளை மணந்து சந்தோஷமாக இரு..!!” என்றார்.

முதலில் அவர் சொன்னதைக்கேட்டு நானும், மாறதேவனும், கருப்பு பாண்டியும் அதிர்ச்சி அடைந்தாலும், அவர் சொன்னதில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டோம்.

பின் “எங்கு செல்லலாம்..?” என்று யோசித்தோம்.

“கலிங்கத்திற்கே போய்விட்டால் என்ன..?” என்று கேட்டார் தோத்தா.

“ஆனால் அங்கு சென்றால் இத்தனை நாட்கள் கொள்ளைக்காரர்களோடு இருந்ததற்காக, இளவரசியாரையும், இவரையும் மன்னர் வெட்டிப் போட்டுவிடுவார்..!!” என்று சொன்னாள் வைஷ்ணவியின் தோழி.

“சரி இதைப் பற்றி பின்னர் பேசலாம், முதலில் எங்களிடம் இருந்த வீரர்களுக்கு, வேண்டும் பொருள் கொடுத்து அனுப்பிவிடலாம்..!!” என்று முடிவு செய்தோம்.

மறுநாளே அதற்கான வேலைகளில் இறங்கினோம்.

என் வீரர்களுக்கு, “இத்தொழிலை இத்தோடு நிறுத்திக்கொண்டு, வேறு ஊர் செல்லப் போகிறேன்..!!” என்று சொன்னேன்.

“அதனால் அவரவர் வேண்டும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்..!!” என்று உத்தரவிட்டேன்.

எல்லோரும் வேண்டும் பொருட்களை எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றார்கள். 10 வீரர்கள் மட்டும் செல்ல மறுத்து, என் கூடேயே இருந்தார்கள்.

இப்படியே அன்றைய காலைப்பொழுது நகர்ந்து விட்டது.

இரவிற்கு மாளிகைக்குத் திரும்பினேன். வைஷ்ணவியைத் தேடி அவள் அறைக்குச் சென்றேன்.

அங்கிருந்த அவள் தோழி வைஷ்ணவி மாடத்தில் இருப்பதாகச் சொன்னாள்.

மாடத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பஞ்சணை ஒன்றில் சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள். ஓசை எழுப்பாமல் சென்று பின்னால் இருந்து அவளை அணைத்தேன்.

“ஓஓ..!! வந்துவிட்டீர்களா..!!” என்று கேட்டாள்.

“நான்தான் உன்னை அணைத்தேன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்..?”

“உங்களைத் தவிர யார் என்னை இப்படி அணைத்துக்கொள்வார்கள்..?” என்று வெட்கத்தில் சொன்னாள். சொன்னவள் சற்று என் உடலோடு ஒட்டிக்கொண்டாள்.

நான் மெல்ல அவள் காது மடல்களில் முத்தமிட்டேன். பின் அவள் கழுத்தில் உதடுகளைப் புதைத்தேன்.

என் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்தவாறு என்னை நோக்கித் திரும்பினாள்.

நிலவொளி அவள் அழகை மேலும் அதிகப்படுத்தியது. மெல்ல அவள் செவ்விதழ்களை நோக்கிச் சென்றேன். இருவருடைய நாசிகளும் உரசிக் கொண்டன.

மெல்ல அவள் இதழ்களின் முத்தமிட்டேன். அப்படியே உதடுகள் காதல் மொழி பேச ஆரம்பித்தது. நேரம் செல்வது கூடத் தெரியாமல் அப்படியே இருந்தோம்.

“தேவா..” என்று யாரோ பலமாக அழைப்பது கேட்டு, இருவரும் சுய நினைவுக்கு வந்தோம்.

வைஷ்ணவி வெட்கத்தில் தலை குனிந்தாள். சப்தம் வந்த திசையை நோக்கினேன் அங்கு கருப்புபாண்டி சிரித்துக்கொண்டு இருந்தான்.

நேற்றும், இன்றும் அவளோடு இன்பத்தில் இருக்கும்போது இப்படிக் குழம்பியதை நினைக்க கோபம் வந்தது.

சற்று கோபத்துடன், “என்னடா..?” என்றேன்.

“ம்ம்.. உன் நிலை எனக்குப் புரிகிறது. இன்று மட்டும் பொறுத்துக்கொள், நாளை மாலை உங்களுக்குத் திருமணம்..!! அருகில் உள்ள தீவின் குகைக் கோயிலில்..!! அதன் பின் நீ என்ன வேண்டுமானாலும் செய், தற்போது என்னோடு கீழே வா..!!” என்று சிரித்தபடி கூறினான்.

நான் வேண்டா வெறுப்பாக அவனோடு கீழே சென்றேன். அங்கு தோத்தா கிழவனும் மற்றவர்களும் இருந்தனர்.

தோத்தாவிடம், “என்ன அவசரமாக திருமணம்..?” என்று கேட்டேன்.

“நாளை மிகவும் நல்லநாள். இதுபோன்ற சிறப்பான பௌர்ணமி நாள் 12 வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும். உங்கள் அதிர்ஷ்டம் நாளைதான் அந்த நாள்..!! எனவே நாளையே உங்கள் திருமணத்தை முடித்து விடலாம் என்று தீர்மானித்தேன். தவிர உங்கள் திருமணத்தை தள்ளி வைப்பது அவ்வளவு நல்லதாக எனக்குப்படவில்லை..!!” என்று சொல்லி முடித்தார் தோத்தா.

திருமண நாள் என்பதால் அன்று காலையே எல்லோரும் எழுந்து விட்டிருந்தனர். திருமண ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்தனர்.

அன்று மாலை தோத்தா கிழவன், நண்பர்கள், மீதமிருந்த 10 வீரர்களுடன் அத்தீவிற்குப் படகில் சென்றோம். சில நாழிகை பிரயாணத்தின் பின் அந்த அழகிய தீவை அடைந்தோம்.

அது ஒரு சிறிய தீவு, ஆனால் அழகான மனங்கவரும் சோலைகளுடன் இருந்தது. அந்தத் தீவில் விலங்குகளோ, மனிதர்களோ கிடையாது. எப்போதாவதுதான் பேய்த்தீவில் இருந்து குகைக் கோயிலுக்கு வருவார்கள்.

நாங்கள் சென்றபோது எங்களைத் தவிர யாரும் அங்கு இல்லை. குகைக் கோயிலில் காந்தர்வ முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், “நீங்கள் இருவரும், உங்கள் முதலிரவை இத்தீவிலேயே கழித்துவிட்டு, நாளை காலை வாருங்கள்..!!” என்று கூறிவிட்டு எல்லோரும் புறப்பட்டனர்.

“ஆனால், இங்கு எங்கு தங்குவது..?” என்று கேட்டேன்.

குகைக் கோயிலுக்கு எதிரே இருந்த மற்றொரு குகையைக் காட்டி, “அங்குதான்..!!” என்று சொல்லிவிட்டு, எங்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் படகில் ஏறிச்சென்று விட்டனர்.

நான் வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு அக்குகைக்குச் சென்றேன். தென்றல் காற்றும், நிலவொளியும் தாராளமாக வரும் வகையிலான அமைப்புக்களை இயற்கையாகவே கொண்டிருந்தது அக்குகை.

குகையின் தரையில் நறுமணம் மிக்க மலர்களும், வாசனை இலைகளும் கொண்டு இயற்கையான பஞ்சணை ஒன்றை அமைத்திருந்தனர்.

சூரியன் கடலினுள் மறைய, சந்திரன் வானில் எழுந்தான்.

வைஷ்ணவியை பஞ்சணையில் அமர்த்தி, நானும் அவள் அருகில் அமர்ந்தேன். சோலையில் இருந்து தென்றல் காற்று சில்லென்று வீசியது. நிலவின் ஒளி அக்குகையை ரம்மியமாக மாற்றி விட்டிருந்தது.

அவள் கண்களை நோக்கினேன். “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்..?” என்று மென்மையாகக் கேட்டாள்.

“உலகில் சக்தி வாய்ந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று காதல், மற்றையது பெண்ணின் பார்வை. இவ்விரண்டிற்கும் முன்னால் எத்தனை பெரிய வீரனும் அடிமைதான்..!!” என்று சொன்னேன்.

வைஷ்ணவி மந்தகாசப் புன்னகையொன்றை வீசினாள்.

மெல்ல அவளைப்படுக்க வைத்தேன். அருகில் நானும் படுத்துக்கொண்டேன். மெல்ல அவள் இதழ்களில் முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தேன். பின் மெதுவாக கழுத்தில் முத்தமிட்டேன். அப்படியே என் கைகளை அவள் முலைகளில் வைத்தேன்.

“ம்ம்..” என்ற மெல்லிய ஒலியோடு, கண்களை மூடிக் கொண்டாள்.

மெதுவாக அவள் மார்புக் கச்சையினை அவிழ்த்தேன். மெதுவாக விரல்களால் அவள் முலைகளை வருடினேன். சிறிது நேரம் வருடியபிறகு மெல்ல அவள் முலைக்காம்புகளில் முத்தமிட்டேன்.

பின் அவள் வயிற்றில் முத்தமிட்டேன். வயிற்றில் முத்தமிட்டபோது கூச்சத்தால் நடுங்கினாள். பின் மீண்டும் அவள் இதழ்களில் தஞ்சம் அடைந்தேன்.

அவள் மெதுவாக என் பட்டு வேஷ்டியினை கழற்றினாள். நான் அவள் சேலைக்கு விடுதலை அளித்தேன்.

ஒரு கையால் அவள் முலைகளை வருடிக்கொண்டு, மறுகையை அவள் பெண்ணுறுப்புக்கு நகர்த்தினேன். அடர்த்த முடியினுள் மென்மையாக இருந்தது அவள் பெண்ணுறுப்பு.

அதனை மெதுவாக விரலால் தடவினேன். அவள் காமத்தில் ஒரு கையால் என்னை இறுக அணைத்துக்கொண்டு, மறுகையால் என் ஆண்மையைத் தொட்டாள்.

அவள் கைபட்டதும் நானும் கூச்சத்தால் நடுங்கினேன். இருவர் உதடுகளும் இணைந்திருக்க, இன்பத்தில் கண்கள் மூடியிருக்க எம் கைகள் இன்ப வேலைகளைத் தொடர்ந்தன.

சிறிது நேரத்தில் என் ஆண்மையை, அவள் பெண்மையில் வைத்தாள். நான் மெதுவாக நுழைத்தேன். தடைகளை கிழித்து, மெதுவாக வேகத்தை அதிகரித்தேன்.

தென்றலும், நிலவும் போட்டி போட்டுக்கொண்டு குளிர்மையை அள்ளி வீசினாலும், எங்கள் உடல்கள் வியர்வைத் துளிகளில் நனைந்தது.

கொஞ்ச நேரத்தின் பின், என் சந்ததியை அவள் கருவில் விதைத்தேன். பின் அவள் முகத்தைப் பார்த்தேன். வெட்கத்தில் கைகளால் மூடிக்கொண்டாள்.

மெதுவாக கைகளை விலக்கி அவள் இதழ்களில் முத்தமிட்டேன்.

பின் அசதியில் இருவரும் உறங்கிவிட்டோம். காலையில் இருவரும் எழுந்து சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தோம். ஸ்நானத்தின் பின் அவள் சேலையை அவளிடமே கேட்டுக்கேட்டு, அவளுக்கு கட்டிவிட்டேன்.

கட்டும்போது சில்மிஷங்களையும் செய்தேன்.

சற்று நேரத்தில் கட்டியிருந்த படகில் அவளோடு பேய்த்தீவை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். இரவில் நடந்ததைப் பற்றி பேசியவாறே வேகமாகப் படகைச் செலுத்தினேன்.

சில நாழிகையின் பின் பேய்த்தீவின் கரையை அடைந்தேன்.

பேய்த்தீவு என்றும் இல்லாதவாறு சற்றுப் பதட்டமாகக் காணப்பட்டது கடற்கரை. சில கப்பல்கள் எரிந்து கொண்டிருந்தன. எம்மைக் கண்டதும் மாறதேவன் வேகமாக ஓடி வந்தான்.

“வா தேவா, தோத்தா உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்றார்..!!” என்று பதட்டமாகக் கூறினான்.

“இங்கு என்ன நடந்தது..?” என்று ஒன்றும் புரியாமல் குழப்பமாக கேட்டேன்.

“உங்களை அத்தீவில்விட்டு நாங்கள் இங்கு திரும்பிய சில நாழிகைக்குள், கலிங்கப் படைகள் இங்கு வந்தன. வந்தவர்கள் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் உங்கள் இருவரையும் கொல்வதற்காகத்தான் வந்திருந்தார்கள்..!! சிறிது நேரம் இங்கு பெரும் யுத்தம் நடந்தது. இத்தீவின் கொள்ளையர்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களை எதிர்த்தோம். முடிவில் தோற்று ஓடி விட்டனர்..!!” என்றான்.

நான் தோத்தா இருந்த இடத்திற்குச் சென்றேன். அவர் இரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார்.

மெல்ல அவர் தலையை என் மடிமீது வைத்துக்கொண்டு, “தோத்தா..” என்று அழைத்தேன்.

மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். “வா தேவா.. நான் உன்னை விட்டுப் பிரியும் வேளை வந்து விட்டது..!! வைஷ்ணவிதேவி சொன்னது போல் உங்களை அழிக்க அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இனிமேலும் இங்கு இருக்காதே..!! கலிங்கத்தின் எதிரி நாடான பாண்டிய நாட்டிற்குச் சென்றுவிடு..!! இப்படியே கழுகுத் தேவனாகச் செல்லாதே, உன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு செல். கடற்கழுகில் இருந்தவர்களுள் இப்படி இறக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும்..!!” என்று ஈனஸ்வரத்தில் முனகினார்.

பின் என் கண்களைப் பார்த்தவாறே பிரிந்து போனார். நெஞ்சம் முழுக்க துக்கம் கனக்க, மெல்ல எழுந்தேன். பின் அவரைப் புதைப்பதற்கான ஏற்பாடுகளில் எல்லோரும் இறங்கினோம்.

சிறிது நேரத்தில் அவரை புதைத்துவிட்டு, அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கினோம்.

அப்போது தோத்தாவின் இன்னொரு செய்தியையும் சொன்னான் மாறதேவன்.

“இங்கிருந்து இரவில் கடற்கழுகில் புறப்பட வேண்டும். இத்தீவில் இருந்து சற்றுத் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, நாம் வேறு படகில் ஏறிக்கொண்டு கடற்கழுகை வெடிக்கவைக்க வேண்டும். இங்கு இருக்கும் அனைவரும் நாம் கடற்கழுகோடு மரணித்து விட்டதாக நினைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதன் பின்னர் நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்..!!” இதுதான் தோத்தாவின் செய்தி.

இப்படி எங்கள் மேல் பாசம்கொண்ட தோத்தாவை நினைக்க கண்கள் குளமாகியது.

தோத்தாவின் திட்டப்படியே அன்று இரவு நான், நண்பர்கள், வைஷ்ணவி, அவள் தோழி, மீதி வீரர்கள் அனைவரும் கடற்கழுகில் இறுதிப் பயணம் புறப்பட்டோம்.

தீவிலிருந்து சற்றுத் தொலைவில் கடற்கழுகை நிறுத்தி, சற்றுத் தாமதமாக வெடிக்கும் படி வெடி பொருட்களைப் பொருத்தினோம். பின் வேறு படகில் ஏறி சற்றுத் தொலைவில் நின்று கடற்கழுகைப் பார்க்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் கடற்கழுகு வெடித்துச் சிதறியது.

சிறு வயதில் இருந்தே என் தாய் போல இருந்த கடற்கழுகு கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கியது. பல கப்பல்களைச் சிதறடித்த என் கப்பல், இன்று அதுவே அடையாளம் தெரியாமல் சிதறிப்போனது.

எங்கள் கண்களின் கண்ணீரோடு அதற்கு பிரியாவிடை அளித்தோம்.

பின் படகை வேகமாகச் செலுத்தி, மறுநாள் காலை பாண்டிய நாட்டை அடைந்தோம். அங்கு பாண்டியனின் சேனையில் எங்கள் பெயர்களையும் அடையாளத்தையும் மறைத்து, வீரர்களாகச் சேர்ந்தோம்.

காலங்கள் செல்ல என் திறமையைக்கண்டு பாண்டிய மன்னன் என்னை சேனாதிபதி ஆக்கினான். என் நண்பர்கள் படைத்தலைவர்கள் ஆனார்கள்.

கடற்கொள்ளையனாக இருந்து வியாபார, அரச கப்பல்களைக் கொள்ளையடித்த நானே, இன்று அதே கப்பல்களுக்கு கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறேன்..!!

ஆம், பாண்டியனின் கடற்சேனையின் சேனாதிபதி நான். பாண்டிய கடல் எல்லைக்குள் ஒரு கொள்ளைக்காரக் கப்பல்கூட வராமல் பார்த்துக்கொண்டேன். அதனால் விரைவிலேயே பாண்டியனிடம் நல்ல பெயர் வாங்கினேன்.

இப்போது..

“சேனாதிபதி.. நம் மேற்குக் கடலில் கடல் கொள்ளையர்கள் தென்படுவதாக செய்தி வந்துள்ளது..!!” என்ற வீரனின் குரல் கேட்டு எழுந்தேன், கடற் கொள்ளையர்களை எதிர்ப்பதற்காக..!!

Previous articleபார்த்ததுமே பத்திக்கிச்சு…..டக்குனு கூதில சுன்னி சொருகிச்சு!
Next articleகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா?